சினிமா செய்திகள்

குழந்தை பெறாமலேயே தாயான நடிகை பிரியங்கா சோப்ரா!

Published

on

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா குழந்தை பெறாமலே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை அடுத்து அவர் தாயாக மாறியதை சந்தோசமாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா என்பதும் அதனை அடுத்து அவர் உலகிலுள்ள அனைவராலும் கவனிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் விஜய் நடித்த தமிழன் என்ற படத்தில்தான் அவர் திரையுலகில் அறிமுகமானார் ஆனால் அதன்பிறகு அவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அவருக்கு தமிழில் வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் அதே நேரத்தில் பாலிவுட் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது என்பதும் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது ஹாலிவுட் திரைப் படங்களிலும் ஹாலிவுட் வெப்சீரிஸ் களிலும் நடித்து வருகிறார் என்பதும் இந்திய திரை உலகில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் என்பதும் உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் என்ற போர்ப்ஸ் பத்திரிக்கையின் பட்டியலில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் அவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் குழந்தை பெறுவதற்கு நேரமில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தளத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
செய்துள்ள பதிவில், ‘நாங்கள் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டோம் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்பு மிக்க நேரத்தில் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

என்ன குழந்தை பிறந்துள்ளது? குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது? என்பதை பிரியங்கா சோப்ரா தெரிவிக்கவில்லை என்றாலும் மிக விரைவில் அவர் குழந்தை குறித்த முழு விவரங்களை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை தான் குழந்தை பிறந்து உள்ளதாகவும் பிரியங்கா சோப்ரா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே தாயான நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version