சினிமா செய்திகள்

10 ஆண்டுகளாகக் குறையாத காதல்… காதலர் பிறந்தநாளுக்கு உருகும் பிரியா பவானி சங்கர்

Published

on

நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலரின் பிறந்த நாளை முன்னிட்டு வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது கைகளில் தற்போது இந்தியன் 2, குருதி ஆட்டம், பொம்மை, ஓ மணப்பெண்ணே, ருத்ரன், களத்தில் சந்திப்போம், பத்து தல, நடிகர் அசோக் செல்வன் உடன் பெயர் அறிவிக்கப்படாத படம், நடிகர் அருண் விஜய் உடன் ஒரு படம் என செம பிஸியாக நடித்து வருகிறார்.

பிரியா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தன்னுடைய காதலரை அதிகாரப்பூர்வமாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு முன்பு காதலர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது எடுத்த புகைப்படத்தையும் சேர்த்துப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஒரு வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்துகளையும் பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் ராஜவேல் ராஜ் என்பவரைக் காதலித்து வருகிறார். தனது பதிவில், “உனக்காக எதை சேமித்து வைத்திருக்கிறேன் பார்.இந்த பத்து ஆண்டுகளில் வாழ்க்கை எப்படி எப்படியோ மாறிவிட்டது. ஆனால், எந்த சூழலிலும் மாறாதது நமது உறவு மட்டுமே. சிறந்த டான்ஸர், கிட்டாரிஸ்ட், ராக்ஸ்டாருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version