சினிமா செய்திகள்

சிம்பு உடன் முதன்முறையாக ஜோடி சேரும் ‘மேயாத மான்’ நாயகி..!

Published

on

சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் பத்து தல படத்தில் நாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார்.

சிம்புவுக்கு வரிசையாக ஈஸ்வரன், மாநாடு படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில் அடுத்ததாக பத்து தல படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளார். இதில் சிம்புவுடன் முன்னணி கதாபாத்திரத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கிறார். கன்னட மொழியில் வெளியான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆக இந்தப் படம் இருக்கும்.

இதில் சிம்பு டான் ஆகவும் கெளதம் போலீஸ் ஆகவும் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்ரன. இந்த சூழலில் சிம்பு உடன் முதல் முறையாக ஜோடி சேர நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சிம்புவுக்கு வருகிற பொங்கல் பண்டிகையின் போது மாஸ்டர் உடன் போத ஈஸ்வரன் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வரிசையாக படங்களில் கமிட் ஆகி வரும் பிரியாவுக்கு வருகிற டிசம்பர் 31-ம் தேதி பிறந்தநாள் என்பதால் ஒரு வார கொண்டாட்டத்துக்குத் தயாராகி உள்ளாராம்.

seithichurul

Trending

Exit mobile version