சினிமா செய்திகள்

இயற்கை குறித்து இன்ஸ்டாகிராமில் கவிதை எழுதிய பிரியா பவானிசங்கர்!

Published

on

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர் என்பதும் இவர் தற்போது தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ சிம்புவின் ’பத்து தல’ அருண்விஜயின் ’யானை’ கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ உள்பட 10 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா பவானி சங்கருக்கு மில்லியன் கணக்கில் பாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் அவரது ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போஸ்டும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயற்கை குறித்து இன்ஸ்டாகிராமில் பிரியா பவானி சங்கர் எழுதிய கவிதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த கவிதையை அவர் ஒரு திரைப்படத்திற்காக எழுதியுள்ளார் என்றும் இந்த பாடலை அவரே பாட இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராமில் நடிகை பிரியா பவானி சங்கர் எழுதிய கவிதை இதோ:
மௌனம் பகிர்ந்து
கை விரல் பிடித்து
கதை பேசிய இரவு
விடியாமலே போயிருந்தால் தான் என்ன?

உனக்கு மட்டும் கேட்ட
என் மனம் இசைத்த பாடல்
மொழி தேடாமல்
உன்னோடே சேர்ந்து தூரம் போனது.
வரிகளற்ற என் பாடலை திருப்பிக்கொடு.
இம்முறை மௌனம் புரிய என்னிடம் ‘நாம்’ இல்லை
வார்த்தைகள் நிரப்பி நானே வைத்துக் கொள்கிறேன்

seithichurul

Trending

Exit mobile version