Connect with us

தமிழ்நாடு

ரூ.700 கோடி மோசடி செய்த தனியார் பஸ் உரிமையாளர்: மக்கள் திருந்தவே மாட்டார்களா?

Published

on

தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர் ஒருவர் பொதுமக்களிடம் பணம் வசூலித்து அதிக வட்டி தருவதாக கூறி ரூ 500 கோடி வரை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனம் நடத்திவரும் கமாலுதீன் என்பவர் பேருந்து தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக அளவு பங்கு தருவதாகவும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2,000 ரூபாயும் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 20 ஆயிரம் வரையும் பங்கு தொகையை தருவதாக கூறியிருந்தார்.

இதனை அடுத்து அவரிடம் ஏராளமான ஒரு லட்சம் முதல் பெரிய தொகையை பலர் முதலீடு செய்துள்ளனர். ஆரம்பத்தில் மூன்று மாதங்கள் சரியாக பங்கு தொகையை அவர் வழங்கியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பேருந்துகள் இயங்கவில்லை என்பதால் அவரால் பங்கு தொகையை கொடுக்க முடியவில்லை. மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை ஏற்பட்டு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் கமாலுதீன் மனைவி மற்றும் அவரது வாரிசுதாரர்கள் கமாலுதீன் வாங்கிய டெபாசிட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியதால் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கமாலுதீன் மக்களிடம் இருந்து வாங்கிய பணத்தில் வெளிநாட்டில் நட்சத்திர ஓட்டல், பண்ணை வீடுகள், மகன் பெயரில் பள்ளிக்கூடம் என ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தெரிகிறது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரூபாய் 400 கோடியும் வெளிநாட்டில் இருந்து பெற்ற முதலீட்டையும் சேர்த்தால் ரூபாய் 700 கோடிக்கும் மேல் அவர் பெற்றுள்ளதாக தெரிகிறது. இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். தங்களுடைய பணத்தை திரும்பப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தால் பணம் பறி போய் விட அதிக வாய்ப்பு இருப்பதாக ஏராளமான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் இன்னும் திருந்தவில்லை என்பதுதான் இந்த நிகழ்ச்சியிலிருந்து தெரியவருகிறது.

author avatar
seithichurul
ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா5 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்5 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்2 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?