சினிமா செய்திகள்

லூசிஃபர் வெற்றி… மோகன்லாலை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்கும் ப்ரித்விராஜ்

Published

on

மலையாளத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு பட உலகிலும் வெற்றிப் பெற்ற லூசிஃபர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் மோகன்லாலை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் நடிகர் ப்ரித்விராஜ்.

நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநர் ஆக அறிமுகம் ஆன திரைப்படம் லூசிஃபர். இந்தப் படத்தில் மோகன்லால் கதாநாயகன் ஆக நடித்திருப்பார். இவர்களுடன் விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். இதைத் தொடர்ந்து மீண்டும் மோகன் லாலை வைத்தே ஒரு படத்தைத் தொடங்கி உள்ளார் ப்ரித்விராஜ்.

‘ப்ரோ டாடி’ என இந்தப் படத்துக்கு தலைப்பு வைத்துள்ளனர். இன்று முதல் ப்ரோ டாடி படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. கேரளாவில் கொச்சி நகரிலேயே முழுவதுமாகப் படப்பிடிப்பு நடக்க இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இன்னும் கேரள அரசு படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்கவில்லை. இதனால் படக்குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டியில் ஒரே கட்டமாக 40 நாட்களில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படம் தியேட்டர் வெளியீடாக மட்டுமே இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முழுவதும் கமர்ஷியல் படமாக உருவாகும் ப்ரோ டாடி படத்துக்காக 25 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளாராம் மோகன்லால். இயக்குநர் ப்ரித்விராஜும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகி ஆக நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version