இந்தியா
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார் பிரதமர் மோடி: வைரல் புகைப்படம்
![modi vaccine - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/modi-vaccine.jpg)
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பூசி பொதுமக்களுக்கு போட்டு வரும் நிலையில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது
இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் டோஸை பிரதமர் மோடி செலுத்திக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பிரதமர் மோடி தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவுடன் ’இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தகுதி உடைய அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.