உலகம்

300-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த 30 ஆவிகள்: பாதிரியார் அதிரடி!

Published

on

பிரேசிலில் பாதிரியார் ஒருவர் 300-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு அவர் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜவாகோ டீக்ஸீரா டி ஃபரியா என்பவர் பாதிரியாராகவும், மனநல மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார். கடவுளின் தூதர் என தன்னை அழைத்துக்கொள்ளும் இவர் ஆன்மீக ரீதியில் மனநல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருந்தது.

இதனையடுத்து இந்த பாதிரியார் 300-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சில மாதங்களுக்கு முன்னர் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது பாதிரியார், தனது உடலுக்குள் 30-க்கும் மேற்பட்ட ஆவி புகுந்துவிட்டதால் தான் நான் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இவரது இந்த காரணம் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Trending

Exit mobile version