தமிழ்நாடு

சிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்று சீரழித்த பாதிரியார்!

Published

on

சேலத்தில் 13 வயதான எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சேலத்தில் அஸ்தம்பட்டியில் சிஎஸ்ஐ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சேலத்தை அடுத்த வீராணத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு சிறுமிக்கு கதை சொல்வதாகக்கூறி தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார் இந்த பள்ளியின் நிர்வாகியும், பாதிரியாருமான ஜெயசீலன் என்பவர்.

அப்போது சிறுமியை அந்த அறையில் வைத்து பாதிரியார் ஜெயசீலன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து நடந்த சம்பவத்தை சிறுமி பெற்றோரிடம் கூற அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் பாதிரியார் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கின் விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் நேற்று தீர்ப்பு வெளியானது. தீர்ப்பில் பாதிரியார் ஜெயசீலன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 25000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version