சினிமா செய்திகள்

கவர்ச்சிப் படம் பகிர்ந்த யாஷிகா… ஜொல்லு விட்ட பிரேம்ஜி!

Published

on

கோலிவுட்டில், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து ‘ஜாம்பி’, ‘ராஜபீமா’ போன்ற திரைப்படங்களிலும் அவர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

பின்னர் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைக்குப் பாத்திரம் ஆனார். அதில் கிடைத்த பெயர் மற்றும் புகழை வைத்து அடுத்தடுத்துப் படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது அவர் ‘சல்பர்’ என்கிற படத்தில் பெண் போலீஸாக நடித்து வருகிறார். இதைத் தவிர்த்து எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கொரோனா தொற்றுப் பரவல் காலக்கட்டத்தில் தீவிர உடற்பயிற்சி செய்து வந்த யாஷிகா, தன் எடையைக் குறைத்தார். இதையடுத்து பல கவர்ச்சி காட்டும் புகைப்பட ஷூட் எடுத்தார். அது குறித்தான புகைப்படங்களை தன் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று சென்னையில் நடந்த போட்டோ ஷூட் ஒன்றின் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதற்கு கீழே நடிகர் பிரேம்ஜி, ஜொல்லு விடும் ஜிஃப் ஃபைல் ஒன்றை கமென்டாக போட்டார். யாஷிகாவின் படமும், பிரேம்ஜியும் கமென்டும் தற்போது வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version