தமிழ்நாடு

2 ஆடு, 2 மாடு வைத்திருப்பவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!

Published

on

2 ஆடு, 2 மாடு வைத்திருப்பவருக்கு எதற்காக ஒய் பிரிவு பாதுகாப்பு என்றும் அப்படி பார்த்தால் மக்கள் எத்தனை ஆடு, எத்தனை மாடுகளை வைத்து இருக்கின்றனர் அவர்களுக்கு ஏன் ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலை அவர்கள் உண்மையானவராக இருந்தால் அந்த ஒய் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்று அவர் கூற வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மத்திய அரசு கூறித்தான் விலைவாசியை உயர்த்தினோம் என்று திமுக அரசு கூறிக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் இருவருடைய குட்டும் வெளிப்படும் என்றும் அவர் தெரிவித்தார் .

கேப்டன் விஜயகாந்த் கூறியதுபோல் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்றும் விரைவில் திமுக ஆட்சியின் அவலங்கள் மக்களின் வெளிச்சத்துக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு ஒரு குடும்பத்தினரே நிறைய சம்பாதித்து வருகின்றனர் என்றும் பதவியை பெற்று வருகின்றனர் என்றும் அவர் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

 

seithichurul

Trending

Exit mobile version