தமிழ்நாடு

விஜயகாந்த் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேமலதா!

Published

on

விஜயகாந்த் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என செய்திகள் இணையதளங்களில் பரவிய நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து வைத்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவாக இருக்கிறார் என்பதும் அவர் அவ்வப்போது வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவரது குரல்கூட இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவியது.

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜயகாந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு அவரது வீட்டிலேயே படமாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தங்களை தாங்களே பத்திரிக்கையாளர் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலர் வதந்தியைப் பரப்பினர்.

இந்த வதந்தி பல ஊடகங்களில் பரவிய நிலையில் தற்போது இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விளக்கம் வைத்துள்ளார். விஜயகாந்த் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றும் அவர் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விரைவில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்றும் தேமுதிகவின் செயல் தலைவர் பதவி குறித்த அறிவிப்பை விஜயகாந்த் விரைவில் வெளியிடுவார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version