Connect with us

ஆரோக்கியம்

பெண்கள் மது அருந்துவதால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுமா?

Published

on

ஆண்களைப் போலவே தற்போது பெண்களும் மது அருந்தும் பழக்கத்தை அதிகரித்து வருகிறார்கள் என்று சர்வேக்கள் கூறிவரும் நிலையில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் மது அருந்துவதால் பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும் குழந்தையின்மை என்ற பிரச்சனை பெண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக மது அருந்துபவர்களுக்கு முதலில் பாதிக்கப்படுவது ஈரல் தான். ஈரல் தன்னுடைய வேலையை செய்ய விடாமல் உள்ளே செல்லும் மது தடுத்து விடும். அதனால் காலப்போக்கில் ஈரல் பாதிக்கப்படும். ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் மது அருந்துபவர்களுக்கு முதலில் கோளாறு ஏற்படுவது ஈரல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மது அருந்துவதால் அவர்களது ஈரல் பாதிக்கப்பட்டால் அதனால் ஏற்படும் ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாக பெண்களிடம் ஆண் தன்மை அதிகமாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் பெண்கள் தாய்மை அடையும் வாய்ப்பும் குறைந்து குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக மது அருந்தக்கூடாது. மது அருந்துவதால் தாய்மை அடையும் பெண்ணின் உடல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி அவரது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். குழந்தையின் இயல்பு, தோற்றம், செயல்பாடு, ஆரோக்கியம் என பல்வேறு விதமான பாதிப்புகளை தாய் மது அருந்துவதால் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நமது சந்ததி நன்றாக வளர வேண்டுமென்றால் குறைந்தபட்சம் தாய்மை அடைந்து இருக்கும் போதாவது பெண்கள் மது அருந்தாமல் இருக்க வேண்டும்.

ஒரு சிலர் காஸ்ட்லியான வெளிநாட்டு மது அருந்தினால் ஒன்றும் செய்யாது என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் உயர்தரம் மதுவாக இருந்தாலும் சாதாரண பட்டச்சாராயம் ஆக இருந்தாலும் சரி நமது உடல்நலத்திற்கு கேடானது. மதுவை எதிலாவது கலந்து குடித்தாலும் அல்லது கலக்காமல் கொடுத்தாலும் எந்த வகையிலும் மது உடலுக்குள் செல்வது தீங்கானது என்பதை பெண்கள் உள்பட அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

அதேபோல் மது அருந்துவது மட்டுமின்றி கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் புகை பிடிப்பதையும் முழுமையாக நிறுத்திவிட வேண்டும். புகைப் பிடிக்கும் பெண்களுக்கு ஆரோக்கியமற்ற குழந்தை பிறக்கும் என்று பல சர்வேக்கள் உறுதி செய்துள்ளன.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!