சினிமா

முன் ஜாமின் கோரி ஏ.ஆர். முருகதாஸ் மனு

Published

on

சர்கார் படத்தின் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சர்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நேற்று இரவு ஏ.ஆர். முருகதாஸை போலீசார் கைது செய்யப்போவதாக சன் பிக்சர்ஸ் பதிவிட்ட ட்வீட், பெரும் பரபரப்பை கிளப்பியது.

அதை உறுதிபடுத்தும் விதமாக ஏ.ஆர். முருகதாஸ் போலீசார் பல முறை வீட்டு கதவை நேற்று இரவு தட்டியதாகவும், தான் வீட்டில் இல்லாததால், அவர்கள் திரும்பி சென்றதாகவும் தெரிவித்தார்.

சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு முடிவு செய்த போதும், முருகதாஸ் மீது அதிமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர்.

இதனால், எப்போது வேண்டுமானாலும் இந்த அரசால் கைது செய்யப்படலாம் என எண்ணிய முருகதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version