பிற விளையாட்டுகள்
டோக்கியோ பாராலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு உள்பட பல இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். பிரவீன் குமார் 2.07 மீட்டர் தாண்டியுள்ளார் என்பதும் இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்தியாவுக்கு 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பதும் டோக்கியோ பாரா ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா 36 வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
77 தங்கம் உள்பட 168 பதக்கங்கள் பெற்ற சீனா முதலிடத்திலும், 37 தங்கம் உள்பட 102 பதக்கங்கள் பெற்ற கிரேட் பிரிட்டன் 2வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்பிசி, அமெரிக்கா, உக்ரைன், பிரேசில், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி மற்றும் அஜர்பைஜான் ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன.
பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன் குமாருக்கு பிரதமர் மோடி உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Proud of Praveen Kumar for winning the Silver medal at the #Paralympics. This medal is the result of his hard work and unparalleled dedication. Congratulations to him. Best wishes for his future endeavours. #Praise4Para
— Narendra Modi (@narendramodi) September 3, 2021