தமிழ்நாடு

இந்திக்கார பய எல்லாம் தெறிச்சு ஓட போறான்… சீமான் வீடியோவை பகிர்ந்து மாட்டிவிட்ட பிரஷாந்த் கிஷோர்!

Published

on

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது உண்மை என்றும் இதற்கான வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்த பிரஷாந்த் கிஷோர் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

#image_title

முன்னதாக தமிழ்நட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவங்கள் உண்மையானவை, இவற்றை புறக்கணிக்க கூடாது. போலி வீடியோக்கள் என்று கூறுகிறார்கள் ஆனால் விரைவில் உண்மையான வீடியோவை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார் பிரஷாந்த் கிஷோர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பரபரப்பு எல்லாம் ஓய்ந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு மீண்டும் இதனை கிளறியுள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் சீமான், இந்திக்கார பய எல்லாம் தெறிச்சு ஓட போறான். நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே வாரத்தில் அவன் எல்லாம் பெட்டியை கட்டிக்கொண்டு போய்விடுவான். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரே வாரத்தில் எல்லாரையும் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன். கஞ்சா வச்சு இருக்கான்.. கேஸ் போடு.. அபின் வச்சு இருக்கான் கேஸ் போடு.. பலாத்காரம் பண்ணிட்டான் கேஸ் போடு என்று ஜெயிலில் போடுவேன். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரு ஆயிரம் பேரை தூக்கி உள்ளே போடுவேன். அவனுக்கு சோறு போட மாட்டேன். அவர்களை விட மாட்டேன். எல்லாம் தெறிச்சு ஓட போகிறான் என்று சீமான் பேசி உள்ளார். இதனை அந்த வீடியோவில் இந்தியிலும் மொழிபெயர்த்துள்ளார்.

மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில், வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களைப் பயன்படுத்திய அனைவரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பவர்களை இது விடுவிக்காது. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? தங்களின் விறுவிறுப்பான பேச்சுகளுக்காகவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version