சினிமா செய்திகள்

பிரசாந்த்தின் ‘அந்தகன்’ படத்தை கைப்பற்றிய முக்கிய தயாரிப்பாளர்!

Published

on

பிரசாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகி வரும் படம் அந்தகன். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையைத் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர் கைப்பற்றியுள்ளார்.

தமிழ் திரைத்துறையில் வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். 90களில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். அஜித், விஜய் இருவருக்கும் மிகப் பெரிய போட்டியாக இவரது படங்கள் இருந்து வந்தது. இவரது நடிப்பில் உருவான ஜீன்ஸ் படத்தை பார்க்காத 90’ஸ் கிட்ஸே இருக்கமாட்டார்கள்.

ஆனால் தற்போது இவர் பல்வேறு காரணங்களால் படங்களில் அதிகம் நடிக்காமலிருந்து வந்தார். இப்போது இவரது நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘அந்தாதூன்’ படம் ‘அந்தகன்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

கண் தெரியாதவர் போல நடிக்கும் ஹீரோ ஒரு கொலையைப் பார்த்து விடுகிறார். ஆனால் அதை அவர் பார்க்காதது போல காட்டிக்கொண்டாலும், அவர் அதை பார்த்தது எப்படியோ கொலை செய்தவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது.

அதன் பின் அவர்கள் ஹீரோவையும் கொலை செய்ய முயல்கிறார்கள். அதிலிருந்து ஹீரோ எப்படித் தப்பிக்கிறார் என்பதை பல்வேறு திருப்பங்கள் மற்றும் சஸ்பன்ஸ் என இருக்கையின் நுனியில் நம்மை அமர வைத்து பார்க்க வைக்கும் கதை தான் அந்தகன் படமாக உருவாகியுள்ளது.

பிரசாந்த் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, சமுத்திர்கனி என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே அந்தகன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இப்போது ரிலீஸ்க்கு தயாராகி வரும் நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமையை கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் வாங்கியுள்ளது.

எனவே விரைவில் அந்தகன் படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி மற்றும் மலையாளத்தில் இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
seithichurul

Trending

Exit mobile version