சினிமா செய்திகள்
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: தொடங்கியது ‘அந்தகன்’ படப்பிடிப்பு!
பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டாகிய ’அந்தாதூன்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்திற்கு ’அந்தகன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தை ’பொன்மகள் வந்தாள்’ இயக்குனர் ஜேஜே பெடரிக் என்பவர் இயக்க இருப்பதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்திக் மற்றும் சிம்ரன் உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் இந்த படம் குறித்த ஒரு சில வதந்திகளும் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்த படத்தின் இயக்குனர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்கள் ஒட்டுமொத்தமாக விலகி விட்டார்கள் என்றும் இதனால் இந்த படம் டிராப் என்றும் வதந்தியாக கூறப்பட்டது.
ஆனால் வதந்திகளை பொய்யாக்கும் வகையில் சற்று முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியது என்பதும் இன்றைய பூஜையில் தியாகராஜன், பிரசாந்த், சிம்ரன், உள்பட பலரும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.