இந்தியா
பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் முன்னேற்றம்!
பிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாட்டில் முன்னேற்றம் உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 10-ம் தேதி மூளை அறுவை சிகிச்சைக்காக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிராணப் முகர்ஜியின் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது கோமா நிலையில் உள்ள பிரனாப் முகர்ஜிக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது., இந்நிலையில் சிறுநீரக செயல்பாட்டில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனையிலிருந்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
மருத்துவமனையில் பிரானப் முகர்ஜி அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும் இருந்தது.
2012-2017 காலகட்டத்தில் இந்தியாவின் 13வது குடியரசு தலைவராக பிராப் முகர்ஜி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.