சினிமா செய்திகள்

உள்துறை அமைச்சரின் எச்சரிக்கை.. தீபிகா படுகோனுக்கு ஆதரவு அளித்த தமிழ் நடிகர்!

Published

on

மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நடிகை தீபிகா படுகோனுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் தீபிகா படுகோனுக்கு ஆதரவாக தமிழ் நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த ’பதான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் காவி நிறத்தில் ஆபாசமான உடை அணிந்த தீபிகா படுகோனுக்கு மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் ஆடைகள் மாற்றப்படாவிட்டால் இந்த படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் கொடும்பாவி எரிக்கப்பட்டது என்பதும் பல இடங்களில் ஷாருக்கானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ’பாய்காட் பதான்’ என்றா ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தீபிகா படுகோனுக்கு ஆதரவான கருத்தை கூறியுள்ளார். காவி உடை அணிந்தவர்கள் கற்பழிக்கிறார்கள், எம்.எல்.ஏவுக்களை விலைக்கு வாங்கும் புரோக்கர்களாக செயல்படுகிறார்கள், வெறுப்பு பேச்சு பேசுவார்கள், ஆனால் காவி உடை அணிது ஒரு பாடலில் மட்டும் நடிக்க கூடாதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரகாஷ்ராஜ் பொருத்தவரை பாஜகவுக்கு எதிராக மட்டுமே கருத்தை தெரிவிப்பார் என்றும் மற்ற கட்சிகள் செய்யும் தவறுகளை அவர் கண்டுகொள்ள மாட்டார் என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

 

seithichurul

Trending

Exit mobile version