இந்தியா

சிலிண்டருக்கு ரூ.200 மானியம் என்பது கண் துடைப்பா? உண்மையிலேயே கிடைக்குமா?

Published

on

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்குவோர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பில் உண்மையாகவே 200 ரூபாய் கிடைக்குமா? அல்லது கண்துடைப்பா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .

மத்திய அரசு நாளுக்கு நாள் சிலிண்டர் விலையை ஏற்றி கொண்டே இருக்கும் நிலையில் தற்போது ரூ.1018.50 என சிலிண்டர் விலை விற்பனையாகி வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கியவர்களுக்கு மானியம் வழங்கப்படவில்லை என்றும் அப்படியே வழங்கப்பட்டாலும் 50 ரூபாய்க்குள் தான் வழங்கப்படுகிறது என்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்தபோது சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்து இருந்தது. இது குறித்து மக்கள் கருத்து கூறிய போது சிலிண்டருக்கு மானியம் வழங்குவதை விட சிலிண்டரின் விலை குறைத்தாலே போதும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும்தான் மானியம் வழங்கப்படும் என்றும் சிலிண்டர் விலையை குறைத்தால் அனைவருக்கும் குறைக்கப்பட்டது போலாகிவிடும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும் மானியம் வழங்க வேண்டியவர்களுக்கு சரியான வகையில் மானியம் வழங்கினால் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் என்றும் இல்லாவிட்டால் இந்த திட்டம் எதற்காக இயற்றப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்றும் மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Trending

Exit mobile version