சினிமா

தொடர்ந்து 36 மணி நேரம் நடித்த பிரபுதேவா…இயக்குனர் நெகிழ்ச்சி…

Published

on

தமிழ் சினிமாவில் நடன நடிகர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல முகங்கள் கொண்டவர் பிரபுதேவா. ஒரு பக்கம் ஹீரோவாக நடிப்பது, பாலிவுட்டில் சல்மான்கானை இயக்குவது, நடன இயக்குனராக பணிபுரிவது என எப்போதும் தன்னை பிஸியாக வைத்திருக்கிறார்.

pon manickavel

பிரபுதேவா காவல்துரை ஆணையராக நடித்துள்ள திரைப்பாம் பொன் மாணிக்கவேல். இப்படத்தை ஏ.சி.முகில் என்பவர் இயக்கியுள்ளார். சில கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

prabu deva

இப்படம் பற்றி கருத்து தெரிவித்த ஏ.சி.முகில் ‘இப்படத்தின் க்ளேமேக்ஸ் காட்சிக்காக அனைத்து நடிகர்களிடமும் கால்ஷீட் வாங்கி விட்டோம். 2 நாட்களில் அக்காட்சியை முடிப்பது என தீர்மானித்தோம். தயாரிப்பாளரும் செட்டுக்கு தேவையான செலவுகளை செய்துவிட்டார். ஆனால், பிரபுதேவா திடீரென மொரீஷியல் செல்வதாக கூறினார். அவர் கூறிய தேதிக்கு முதல்நாள்தான் மற்ற நடிகர்களின் கால்ஷிட் எங்களுக்கு கிடைத்தது. எனவே, 36 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்ப்பை நடத்தினோம். சாப்பிட கூட நேரமில்லை. அதுவரை பொறுமையாக இருந்து நடித்து கொடுத்தார் பிரபுதேவா’ என அவர் கூறினார்.

இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version