சினிமா செய்திகள்
தபாங் 3ம் பாகத்தை இயக்கும் பிரபுதேவா!
முதல் இரண்டு பாகங்களில் நாயகியாக நடித்த சோனாக்ஷி சின்ஹா தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சல்மான்கான் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியான பல படங்கள் தோல்வியை தழுவின. இதனால், வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என எண்ணிய சல்மான், தனக்கு வாண்டட் எனும் வெற்றி படத்தை இயக்கி கொடுத்த பிரபுதேவாவை மீண்டும் அழைத்துள்ளார்.
தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்க தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை பிரபுதேவா இயக்கவுள்ளார். இந்த படத்திலும் முதல் இரண்டு பாகங்களில் நாயகியாக நடித்த சோனாக்ஷி சின்ஹா தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மற்றொரு நாயகியையும் படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.
தமிழில் மீண்டும் நடிக்க வந்த பிரபுதேவா, குலேபகாவலி, லக்ஷ்மி படங்கள் படுதோல்வியை தந்த நிலையில், தேவி 2, பொன்மாணிக்கவேல் போன்ற படங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த நேரத்தில் சல்மான் கான் படத்தை இயக்கும் சான்ஸ் கிடைத்தால், சும்மாவா விடுவார். மும்பைக்கு டிக்கெட் எடுத்து பறந்து விட்டார்.