சினிமா செய்திகள்

வாங்கிய சம்பளம் ரூ.100 கோடியை அப்படியே திருப்பி கொடுத்த நடிகர் பிரபாஸ்: தோல்விக்கு பொறுப்பும் ஏற்பு!

Published

on

நடிகர் பிரபாஸ், ராதேஷ்யாம் படத்திற்காக வாங்கிய 100 கோடி ரூபாயை அப்படியே தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுத்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் உருவான ராதேஷ்யாம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை பெற்றது. இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் என்று கூறப்படுவதால் அந்த தயாரிப்பாளர் அதோடு அவ்வளவுதான் என்று திரையுலக வட்டாரங்கள் கூறின.

ஆனால் இந்த படத்தின் தோல்விக்கு தான் முழுப் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் இந்த படத்திற்காக வாங்கிய சம்பளத்தை 100 கோடி ரூபாயை அப்படியே தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் பிரபாஸ் கூறி இருப்பதாகவும் இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது .

இந்திய திரையுலகில் மட்டுமின்றி உலகத் திரையுலகில் இப்படி ஒரு நடிகர் தோல்விக்கு பொறுப்பேற்று வாங்கிய சம்பளம் முழுவதையும் திருப்பி கொடுத்த வரலாறு இல்லை என்ற நிலையில் ஒரு புதிய வரலாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version