சினிமா செய்திகள்
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்!
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகரின் ஒருவரின் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் இரண்டு படங்களும் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மார்ச் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராதேஷ்யாம் திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது என்பதும் அதேபோல் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் வெளியாக உள்ளதால் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் மோத உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார். யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.