சினிமா செய்திகள்
பிரபாஸ்-தீபிகா படுகோனே நடிக்கும் தமிழ்-தெலுங்கு திரைப்படம்: பூஜையுடன் ஆரம்பம்!
பாகுபலி நடிகர் பிரபாஸ் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே முதல் முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி, பாகுபலி 2 உள்பட பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவரும் பிரபல நடிகருமான பிரபாஸ் ஏற்கனவே ராதே ஷ்யாம் உள்பட மூன்று பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பதும் அமிதாப் பச்சன் உள்பட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் நடித்த ’நடிகை திலகம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தான் இந்த படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாகவும் ஹைதராபாத்தில் சில நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் வரும் 2022ஆம் ஆண்டு இறுதியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.