சினிமா செய்திகள்

நேற்று மாலை.. இன்று தாலி.. நாளை?… மீண்டும் ஷாக் கொடுத்த வனிதா விஜயகுமார்…..

Published

on

கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் வனிதா விஜயகுமார். பீட்டர் என்பவரை 3வது திருமணம் செய்ததும், அதன்பின்னர் நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக மாறியது.

அதன்பின் அதிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் விஜய் டிவியில் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதேபோல், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்னனின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்து அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி பரபரப்பை கிளப்பினார்.

vanitha

சமீபத்தில், காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்து கொண்டது போல், மாலையுடன் அவருடன் மணக்கோலத்தில் நிற்கும் புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். எனவே, ஒருவேளை அவரை வனிதா 4வதாக திருமணம் செய்து கொண்டாரோ எனவும் யோசிக்க துவங்கி விட்டனர். ஒருபக்கம், இது வனிதா நடிக்கும் புதுபடத்தின் புரமோஷனாக இருக்கலாம் எனவும் பலரும் நினைத்தனர். சிலரோ, இது நிஜமா இல்லை திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சியான்னு தெரியலயே என்றும் கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில், சீனிவாசன் அவருக்கு தாலி கட்டுவதுபோல் அடுத்த புகைப்படம் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version