செய்திகள்

சென்னையில் நாளை மின் தடை – எந்தெந்த பகுதியில் தெரியுமா?…

Published

on

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதிலும், தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருவதால் மின்சார கம்பங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படவுள்ளது.

தாம்பரம் பகுதியில் கடப்பேரி சிட்லம்பாக்கம் 2வது மற்றும் 3வது மெயின் தெரு, நீதிபதி காலனி, பாலவிநாயகர் கோயில் தெரு, மீனாட்சி தெரு, பெரியார் தெரு (1 முதல் 7வது குறுக்கு தெரு), ஐயப்பா தெரு, எஸ்.பி.ஐ காலனி, காந்தி தெரு (1வது மற்றும் 2வது குறுக்கு தெரு), அண்ணா தெரு, நேரு தெரு, பல்லாவரம் ரோடு, இந்திராகாந்தி ரோடு, ஒலிம்பியா கோபுரம், மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளிலும், இந்த பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்சாரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version