இந்தியா

நாட்டிலேயே மிகவும் ஏழை எம்பியான பிரதாப் சந்திர சாரங்கியை அமைச்சராக்கிய மோடி!

Published

on

மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியை இன்று அமைத்தது பாஜக. பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவைக்கு இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் நாட்டில் மிகவும் ஏழையான எம்பியான சாரங்கி அமைச்சராக பதவியேற்றார்.

வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்த பதவியேற்பு விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பல மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், உலக தலைவர்கள் பலரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

சரியாக 7 மணிக்கு விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். மோடி பதவியேற்ற பின்னர் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இன்று மொத்தம் 58 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். 25 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், 9 பேர் சிறப்பு அமைச்சர்களாகவும் என 58 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். நாட்டிலேயே மிகவும் ஏழையான எம்பி என்று கூறப்படும் பிரதாப் சந்திர சாரங்கி என்ற எளிய மனிதரை மத்திய அமைச்சராக்கியுள்ளார் பிரதமர் மோடி.

ஓடிஷா மாநிலத்தில் பாலசோர் மக்களவை தொகுதிதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதாப் சந்திர சாரங்கி. குடிசை வீடும், ஓட்டை சைக்கிளிலும்தான் இவருடைய 2 சொத்துக்கள் என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version