இந்தியா
போலியோ சொட்டு மருந்து வழங்குவது காலவரையின்றி ஒத்திவைப்பு.. என்ன காரணம்?
நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து ஜனவரி 17-ம் தேதி வழங்கப்பட இருந்த நிலையில், தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படும். ஆனால் சென்ற ஆண்டு முதல் அது ஒரு முறையாகக் குறைக்கப்பட்டது.
தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே ஜனவரி 17-ம் தேதி வழங்கப்பட இருந்த போலியோ சொட்டு மருந்துக்கான தேதி, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என்றும் தெரிவிக்கப்படவில்லை.