Connect with us

இந்தியா

நடந்து முடிந்த அஞ்சல் தேர்வு ரத்து: தமிழக எம்பிக்களுக்கு அடிபணிந்தது மத்திய அரசு!

Published

on

கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு கடந்த ஞாயிற்று கிழமை தமிழகத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இதற்கு நிலவி வரும் எதிர்ப்பு காரணமாக அந்த தேர்வை தற்போது ரத்து செய்து அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் எழுத முடியும் என அஞ்சல் துறை சுற்றறிக்கை வெளியிட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், அஞ்சல் தேர்வை நடத்தலாம் ஆனால் தேர்வு முடிவை வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி கடந்த ஞாயிற்று கிழமை அஞ்சல் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையிலும், மக்களவையிலும் இது தொடர்பாக தமிழக எம்பிக்கள் குரல் கொடுத்தனர். மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் இது தொடர்பாக விவாதம் நடத்தி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்ந்து அமளியிலும் ஈடுபட்டனர் தமிழக எம்பிக்கள். இதனால் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது விளக்கம் அளித்த மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த ஞாயிற்று கிழமை நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு விரைவில் ரத்து செய்யப்படும். ரத்து செய்யப்படும் தேர்வானது விரைவில் மீண்டும் நடத்தப்படும். அப்போது இந்த தேர்வானது தமிழ் மட்டுமல்லாமல் இதர அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என தெரிவித்தார். தமிழக எம்பிக்கள் மக்களவையில் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையிலேயே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

author avatar
seithichurul
வணிகம்1 மணி நேரம் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா4 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!