தமிழ்நாடு

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது: நீதிமன்றம் உத்தரவு!

Published

on

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பணியிலிருக்கும் ஊழியர்களில் ஒருசிலர் பதவி உயர்வு பெறுவதற்காக முதுகலை பட்டம் படிப்பார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் பதவி உயர்வு தரக்கூடாது என்ற வழக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறையில் பதவி உயர்வு பெற முடியாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தொலைதூர கல்வி மூலம் பட்டப்படிப்பை முடித்து பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற அவர்களுக்கு தகுதி இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது

தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் இரண்டாம் நிலை சார்பாளர் பதவி வகித்த செந்தில்குமார் என்பவருக்கும் பதவி உயர்வு வழங்க தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் தான் இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி இனிமேல் தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version