தமிழ்நாடு

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைப்பு: அதிரடி அறிவிப்பு!

Published

on

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் முழுமையான பாடங்கள் நடத்தி முடிக்க முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வந்தது. இந்த கோரிக்கை கடந்த சில நாட்களாக பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இது குறித்த முறையான அறிவிப்பு பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது

நடப்பு கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் குறைக்கப்படும் என்றும் கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

அனைத்து பாடங்களையும் நடத்தி முடியாத சூழல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பு காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்

பாடத்திட்டங்கள், பள்ளிக்கல்வித்துறை, குறைப்பு,

Trending

Exit mobile version