சினிமா செய்திகள்
பிரபல தமிழ் நடிகர் துரைப்பாண்டியன் காலமானார்!
பிரபல வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
மௌனம் பேசியதே, ரன், ஜெமினி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் துரைப்பாண்டியன்.
அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த துரைப்பாண்டியன், குற்றவியல் பிரிவு வழக்குகளில் ஆஜராகி வாதாடிவந்தார்.
இவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி துரைப்பாண்டியன் காலமானார்.
இவரது மறைவுக்கு அதிமுகவினர், திரை உலகினர் இறங்கல் தெரிவித்து வருகின்றனர்