தமிழ்நாடு

பணமும் இன்பமும் கிடைத்தது: 20 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய ஜிம்பாடி இளைஞர் கைது!

Published

on

இளம் பெண்களால் தனக்கு பணமும் இன்பமும் கிடைத்தது என்ன ஜிம் பாடி இளைஞர் ஒருவர் போலீசில் சிக்கி வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த சையத் முகமது என்பவர் பிறப்பிலேயே பணக்காரர். மேலும் அவர் சிறு வயது முதலே உடற்பயிற்சியில் ஆர்வம் செய்ததால் அவருக்கு இளைஞரான பிறகு ஜிம் பாடியும் சிக்ஸ் பேக்கும் கிடைத்தது.

இதனை அடுத்து மாடலிங் துறையில் நுழைந்தார். அவரது ஜிம்பாடியை பார்த்தும், சொகுசுக்காரில் வருவதை பார்த்தும் பல இளம்பெண்கள் மயங்கினார்கள். மேலும் பணக்கார பெண்கள் பலர் அவருக்கு லட்சக்கணக்கில் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. அனைத்து பெண்களிடமும் அவர் காதல் செய்வதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஏமாற்றி அவர்களுடன் ஜாலியாக இருந்துள்ளார். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் 20 பேர்கள் என்றும், அதில் ஒருவர் துணை நடிகையும் அடக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென அவரால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தவுடன் தான் அவரது சுயரூபம் வெளிப்பட்டது. இதனையடுத்து சையதை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சி அடைய செய்தது.

மாடலிங் துறையில் என் அழகை கண்டு பல பெண்கள் மயங்கினார் என்றும் எனக்காக லட்சக்கணக்கில் செலவு செய்தனர் என்றும் எனக்கு அவர்களால் பணமும் இன்பமும் கிடைத்தது என்று அவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version