சினிமா செய்திகள்

உங்களுக்கு வந்தா ரத்தம்,எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? விஜய்க்கு நச் கேள்வி கேட்ட பொன்னுசாமி!

Published

on

நடிகர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்துள்ள பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி ’உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா’ என கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை விஜய் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மீம்ஸ் பதிவுகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த எச்சரிக்கை குறித்து கருத்து கூறிய பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறியிருப்பதாவது:

அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளை சமூக வலைதளங்களிலோ, போஸ்டர் மூலமோ, பொதுவெளிகளிலோ அவமானப்படுத்தினால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள விஜய் அவர்கள் தனது திரைப்பட வெளியிட்டு சமயங்களில் தனக்கோ, திரைப்பட காட்சிகள் குறித்தோ, கட்அவுட் வைத்து அதன் மேலேறி அதற்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்கிறேன் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வீண் வேலைகளில் ஈடுபட கூடாது எனவும், தங்களின் உயிரை துச்சமாக எண்ணி அவ்வாறு செயல்படுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி ரசிகர்களை நல்வழிப்படுத்த ஏன் முன் வரவில்லை..?

அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வந்தால் மட்டும் ரத்தம், ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் என்றால் அது தக்காளி சட்னியா சிந்திப்பாரா விஜய்?

இவ்வாறு பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending

Exit mobile version