சினிமா

சம்பளத்தை ஜெட் வேகத்தில் ஏற்றிய ஜெயம் ரவி.. ராஜ ராஜ சோழன்னா சும்மாவா!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார். ஆனால், பெரிய அளவில் எந்தவொரு நடிகருடனும் போட்டி எல்லாம் இல்லாமல் நட்பு ரீதியாகவே அனைவருடனும் இயல்பாக பழகி வரும் கெட்டிக்காரர்.

ஜெயம், எம் குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தனி ஒருவன், கோமாளி என நல்ல நல்ல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்து வைத்திருக்கிறார்.

Ponniyin Selvan still

மற்ற நடிகர்களின் ரசிகர்களும் ஜெயம் ரவியை இதுவரை போட்டி நடிகராக கருதாமல் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்த ஜெயம் ரவி தற்போது சம்பளத்தை ஜெட் வேகத்தில் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரை 15 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்காக அதிகபட்சமாக 25 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாகவும், அடுத்தடுத்து அவர் நடித்து வரும் புதிய படங்களுக்கு அவரது சம்பளம் 30 கோடியாக அதிகரித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Siren Movie Pooja

நடிகர் ஜெயம் ரவி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து இறைவன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், சைரன் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் 2 இந்த மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version