சினிமா செய்திகள்

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லைகா!

Published

on

லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடித்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை உருவாக்க பல முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து, எங்களால் அது சாத்தியமாகி உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பதும் முதல் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து உள்ளனர் என்பதும், குறிப்பாக வந்தியதேவன் கேரக்டரில் கார்த்தி, அருள்மொழிவர்மன் கேரக்டரில் ஜெயம் ரவி, கரிகால்சோழன் கேரக்டரில் விக்ரம், நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யாராய், குந்தவை கேரக்டரில் த்ரிஷா நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக சுமார் 500 ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version