சினிமா செய்திகள்
தமிழ் திரை வரலாற்றில் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் 1!
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி வரும் படம் பொன்னியின் செல்வன் 1.
பொன்னியின் செல்வன் படம் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் அந்த படம் மீதான ஆர்வத்தை யாராலும் குறைக்க முடியவில்லை.
இதுவரையில் தமிழ்த் திரை உலகில் தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது.
பொன்னியின் செல்வன் படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் ரிலீஸாகி இரண்டு வாரங்களுக்கு மேலான நிலையில், முதல் வாரத்தில் 308.59 கோடி ரூபாயும், 2-ம் வாரத்தில் 107.35 கோடி ரூபாயும், 3ம் வாரம் முதல் நாளில் 6.76 கோடி ரூபாயும், 2-ம் நாள் 12.80 கோடி ரூபாயும், 3-ம் நாளில் 15.68 கோடி ரூபாய் என மொத்தமாக இதுவரையில் 451.18 கோடி ரூபாய் வசூலைப் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செய்துள்ளது.
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸான விக்ரம் படத்தின் தமிழ்நாட்டின் வசூலை கடந்து, தமிழ்நாட்டில் இதுவரையில் அதிக மகசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் சாதனை படைத்துள்ளது.
2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் கூறுகின்றன.