பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது முழுவீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வியாபாரம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது
முதல்கட்டமாக இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியதாகவும் ரூபாய் 125 கோடி இதற்காக அந்நிறுவனம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்து மொத்த பட்ஜெட் 500 கோடி ரூபாய் என்று கூறப்படும் நிலையில் நான்கில் ஒருபாகம் அதன் ஓடிடி உரிமையிலேயே வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் மற்ற ரிலீஸ் உரிமைகள் குறித்த விபரம் விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது என்பதும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.