சினிமா செய்திகள்

மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’: லைகா வெளியிட்ட அட்டகாசமான போஸ்டர்!

Published

on

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பகுதிகளாக பிரித்து இரண்டு பாகங்களாக திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். முதல் பாகத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்று தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் 2022ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகும் என்று வெளியில் குறிப்பிடப்பட்டுள்ளது

பொன்னின் செல்வன் முதல் பாகம் குறித்த இந்த போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வாள் மற்றும் கேடயத்துடன் இருக்கும் இந்த போஸ்டரை தற்போது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், தோட்டாதரணி கலை இயக்கத்தில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில், ஜெயமோகன் வசனத்தில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

Trending

Exit mobile version