சினிமா
ஆசிய திரைப்பட விருது விழாவில் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு!
மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஆசிய திரைப்பட விருது விழாவில் பல விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ‘ஜெயம்’ ரவி, ஐஷ்வர்யாராய் பச்சன், த்ரிஷா உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்தத் திரைப்படம் 200 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றது.
இப்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாத இறுதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் புரோமோஷன் பணிகளை ஆரம்பித்து இருக்கும் நிலையில், விரைவில் படத்தில் இருந்து முதல் பாடலும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை ஹாங்காங்கில் நடைபெறவுள்ள 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், ’பொன்னியின் செல்வன்1’ திரைப்படம் சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி),
சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்),
சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும்
சிறந்த ஆடை வடிவமைப்பு
(ஏகா லக்கானி) ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க
லைகா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் சார்பாக லைகா ,ஜி்.கே.எம்.தமிழ் குமரன்
மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ரவி வர்மன் ஹாங்காங் பயணம் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.