சினிமா செய்திகள்
’பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் உரிமையை ரூ.800 கோடிக்கு கேட்கிறதா பிரபல நிறுவனம்?
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து மொத்த பட்ஜெட் 500 கோடி என்ற நிலையில் இந்த படத்தை 800 கோடிக்கு ரிலீஸ் உரிமையை பெற முன்னணி நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு உள்ளது.
மேலும் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை மட்டும் 300 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த படத்தை 800 கோடி ரூபாய்க்கு இரண்டு பாகங்களையும் சேர்த்து உலகளாவிய ரிலீஸ் உரிமையை கேட்பதாகவும், இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது .
ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் 2 படத்தை அடுத்து ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்ய கூடிய படமாக பொன்னியின் செல்வன் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தை 800 கோடி ரூபாய்க்கு லைக்கா நிறுவனம் விற்குமா? அல்லது நேரடியாக ரிலீஸ் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.