தமிழ்நாடு

மோடி அரசை கண்டபடி திட்டி டுவீட் செய்த அமைச்சர் பொன்னார்!

Published

on

தமிழகத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய நிதித்துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சராக உள்ளார். இவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து கடந்த செவ்வாய் கிழமை இரவு சில பதிவுகள் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக அடுத்தடுத்து வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிராக அவரது கட்சியை சேர்ந்த, அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டுவீட் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்திருந்த அந்த டுவீட்டை அடுத்து நெட்டிசன்கள் அமைச்சரின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக பதிவிட தொடங்கினர்.

இதனையடுத்து அமைச்சரின் அந்த சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகள் டெலிட் செய்யப்பட்டுவிட்டன. இது எப்படி நடந்திருக்கும் என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளன. இந்நிலையில் அமைச்சரின் ட்விட்டர் கணக்கை கவனிக்கும் அட்மினின் வேர்ட் டாக்குமெண்டில் யாரோ ஒருவர் சில மாற்றங்களை செய்து மோடிக்கும் அரசுக்கும் எதிராக மாற்றம் செய்துள்ளனர். இதனை அட்மின் கவனிக்காமல் அப்படியே பதிவிட்டதால் இந்த தவறு நடந்ததாக தகவல்கள் வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version