தமிழ்நாடு

பொங்கல் பரிசு வழங்கும் தேதி அறிவிப்பு!

Published

on

ஜனவரி 5-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று கூறப்பட்ட வந்த பொங்கல் பரிசு, ஜனவரி 9-ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலிலிருந்ததால் பொங்கல் பரிசு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது தேர்தல் முடிந்து 2-ம் தேதி முடிவுகள் வெளியாகிவிடும். எனவே 9-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்டவை பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டு பேக் செய்யப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version