தமிழ்நாடு

பொங்கல் பரிசு ரூ.2500 இன்னும் வாங்கவில்லையா? கவலை வேண்டாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழக அரசு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.

ரேசன் கடைகளில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், ஜனவரி 13 ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் இன்னும் வெளியூர்களில் உள்ள பலர் இந்த பரிசு தொகுப்பை வாங்க முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் இந்த பொங்கல் பரிசை உறுதி செய்யும் விதமாகத் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு விடுபடாமல் பொங்கல் பரிசு வழங்க ஏதுவாக, ஜனவரி 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகை 2500 மற்றும் தொகுப்பு வழங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இன்னும் பொங்கல் பரிசை பெறாதவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

seithichurul

Trending

Exit mobile version