தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பை பெற கைரேகை அவசியமா?

Published

on

பொங்கல் தினத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கைரேகை அவசியமில்லை என அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பொங்கல் பரிசாக பொங்கலுக்கு தேவையான பொருள்கள் வழங்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிசு பொருட்களை நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நியாயவிலை கடைகளில் மற்ற பொருள்கள் வாங்கும்போது கைரேகை கட்டாயம் என்ற நிலையில் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கைரேகை கட்டாயமில்லை என அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அட்டைதாரர்கள் குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் அட்டையை காண்பித்து பரிசு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் குடும்பத் தலைவர் தான் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version