இந்தியா

சீரியஸாகும் நாராயணசாமி… சீன் போடும் கிரன் பேடி- புதுச்சேரியில் தொடரும் அதிகார மோதல்

Published

on

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையேயான அதிகார மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

புதுச்சேரிக்கு முதல்வராக நாராயணசாமியும் ஆளுநராக கிரண் பேடியும் பொறுப்பேற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், இவர்களுக்கு இடையேயான மோதல் முடிந்தபாடில்லை. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றத் தடையாக இருப்பதாக கிரண் பேடி மீது புகார்ப்பத்திரம் வாசிக்கிறார் முதல்வர் நாராயணசாமி. இதற்காக பொங்கலுக்கு முன்னர் தர்ணா போராட்டத்தில் தன் அமைச்சர்களுடன் சாலையில் அமர்ந்துவிட்டார்.

ஆனால், கிரண் பேடி எதற்கும் அசர்வதாகத் தெரியவில்லை. அமைச்சர்கள் கடிதம் அனுப்பினால் பதில் மட்டும் வருகிறதாம். ஆனால், எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறாராம் கிரண் பேடி. அமைச்சர் கந்தசாமி என்பவர் தற்போது சட்டப்பேரவையிலேயே குளித்துத் தூங்கி சாப்பிட்டு அங்கேயே போராட்டத்திலும் அமர்ந்து வருகிறார்.

ஆளுநர் கிரண்பேடி இதுவரையில் அரசின் சார்பில் முதல்வர், அமைச்சர்கள் என யாரையும் நேரிலேயே சந்திக்க முன் வரவில்லை என்றும் நாராயணசாமியும் அமைச்சர்களும் புகார் தெரிவிக்கின்றனர். தள்ளி அடித்து கிரண் பேடியைச் சந்திக்க சென்ற அமைச்சர்களை காவல் துறையினர் விட மறுப்பதால் தொடர்ந்து சாலையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர். அதிகப்பட்சமாக அமைச்சர் கந்தசாமி கடந்த 10 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், கிரண் பேடி தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் கொடுக்கப்படவில்லை. இதற்காகவும் தனி கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version