தமிழ்நாடு

பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் இல்லை.. மிதப்பில் திரிகிறார்.. அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு

Published

on

சென்னை: பொன். மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி கிடையாது, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டியளித்துள்ளார்.

தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கும் இடையே கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. இந்த பிரச்சனை நாளுக்கு நாள் முற்றி வருகிறது.

நேற்று முதல்நாள் பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி 13 காவல் அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்தனர். அதிகாரிகளின் புகார்களுக்கு நேற்று பொன். மாணிக்கவேல் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று பொன். மாணிக்கவேல் மீது சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.

சிவி சண்முகம் அளித்த பேட்டியில், பொன். மாணிக்கவேலை நேர்மையான அதிகாரி என்று யார் கூறியது. நேர்மையான அதிகாரி என்றால் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும். பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version