இந்தியா

போலியோ சொட்டு மருந்து எப்போது வழங்கப்படும்? வெளியானது புதிய அறிவிப்பு!

Published

on

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக ஜனவரி-17-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளதா, போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி 2021, ஜனவரி 31-ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக ஜனவரி 30-ம் தேதி இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.

2018-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு முதல் அது ஒரு முறையாகக் குறைக்கப்பட்டது. குறைப்புக்கு இந்தியா போலியா பதிப்பு இல்லாத நாடாக மாறி வருவதாகக் கூறுகின்றன.

இந்தியாவில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசமாகப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. கூடுதலாக வேண்டும் என்றால் தனியார் மருத்துவமனைகளில் கடனம் செலுத்தி போலியோ சொட்டு மருந்தைக் குழந்தைகளுக்குப் போட்டுக்கொள்ளலாம்.

seithichurul

Trending

Exit mobile version